செய்திகள்

வேதாரண்யம் அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்றவர் கைது

Published On 2016-11-16 12:11 GMT   |   Update On 2016-11-16 12:11 GMT
வேதாரண்யம் அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் செம்போடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செம்போடை அரசு மதுபான கடை அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தவர் போலீசை பார்த்ததும் ஓட தொடங்கினர். அவரை போலீசார் விரட்டி சென்று பிடித்து விசாரித்த போது அவர் செம்போடை பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (38) என்பது தெரிய வந்தது. 

மேலும் அவர் அனுமதியில்லாமல் வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தும், வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News