செய்திகள்

ஈரோட்டில் பூட்டிய வீட்டில் இடியாப்ப வியாபாரி தற்கொலை

Published On 2016-10-16 16:49 IST   |   Update On 2016-10-16 16:49:00 IST
ஈரோட்டில் பூட்டிய வீட்டில் இடியாப்ப வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பெரிய கீழவயல் பகுதியை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மகன் ஆண்டிக்காளை(வயது26). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ஆண்டிக்காளை தற்போது ஈரோடு, வீரப்பன்சத்திரம், கலைமகள் வீதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து இடியாப்பம் செய்து வீதி வீதியாக சென்று விற்று வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார். மாலை வரை ஆண்டிக்காளை வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஆண்டிக்காளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆண்டிக்காளை உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஆண்டிக்காளை தற்கொலைக்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை. இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News