செய்திகள்

நாகை அருகே முதியவரை கொலை செய்தவர் கைது

Published On 2016-10-07 14:44 IST   |   Update On 2016-10-07 14:44:00 IST
நாகை அருகே முதியவரை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்:

நாகை அருகே உள்ள திருக்குவளையை சேர்ந்தவர் நடேசன் (வயது 70). இவர் சம்பவத்தன்று உழங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரமணி (வயது 45) என்பவர் நடேசனை கீழே தள்ளிவிட்டு அவர் கையில் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த நடேசன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

Similar News