செய்திகள்

கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2016-10-06 17:26 GMT   |   Update On 2016-10-06 17:26 GMT
வேதாரண்யத்தில் கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மகன் வீரையன் (26). இவர் தேத்தாகுடி ஒயின்ஷாப்பில் பீர் வாங்கி குடித்து விட்டு பாட்டிலை உடைத்து பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சின்னப்பன் என்பவரை மிரட்டி அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்து சென்று விட்டார்.

இது குறித்து சின்னப்பன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து வீரையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News