செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது

Published On 2016-10-06 10:58 GMT   |   Update On 2016-10-06 10:58 GMT
வேதாரண்யம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்றுக் கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த செம்போடையைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 38). இவர் செம்போடை கருவைக்காடு பகுதியில் அனுமதியில்லாமல் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு ரோந்து பணி மேற்கொண்டிருந்த போலீசார் தேவேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல் தேத்தாகுடி தெற்கு பகுதியில் மதுபானம் விற்றுக்கொண்டிருந்த நெய்விளக்கு மற்றும் தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்த சண்முகம் (31), சுதன் (40) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News