செய்திகள்

சீர்காழி அருகே முதியவர் மர்ம மரணம்

Published On 2016-10-05 17:42 IST   |   Update On 2016-10-05 17:42:00 IST
சீர்காழி அருகே பழையாறு பங்கிங்காம் கால்வாயில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சீர்காழி:

நாகை வானகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 70), இவர் கடந்த 2 வருடமாக சீர்காழி அருகே பழையாறு பகுதியில் தங்கி மீன்பிடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பழையாறு பங்கிங்காம் கால்வாயில் கோவிந்தராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியாக வந்தவர்கள் புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News