நாகையில் தேர்தல் புகார்களை கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம்: கலெக்டர் தகவல்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகிற 17,19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் தொடர்பான பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கின்ற வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது.
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களையும் மற்றும் தகவல்களையும் 18004253820 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசி மூலம் பெறப்படும் அனைத்து புகார்கள் மற்றும் தகவல்கள் தொடர்பாக உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வின்போது தவறான தகவல்கள் கண்டறியும் பட்சத்தில் தகவல் தந்தவர்கள் மீது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மேற்படி தொலைபேசியில் உண்மையான புகார்களையும், தகவல்களையும் மட்டுமே பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.