செய்திகள்

கோபி அருகே மொபட் மீது கார் மோதி விபத்து: முதியவர் பலி

Published On 2016-09-25 09:35 IST   |   Update On 2016-09-25 09:35:00 IST
கோபி அருகே மொபட் மீது கார் மோதி விபத்தில் அதில் பயணம் செய்த முதியவர் பலியானார்
கோபி:

கோபியை அடுத்த வெட்டையம் பாளையம் பாறைக்காட்டு தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70) இவரது மகன் வேலுச்சாமி என்ற வெற்றிவேல் (38).

வேலுச்சாமிக்கு நேரம் சரியில்லை என்று கூறி அவரது ஜாகத்தை பார்க்க ராமசாமி மொபட்டில் சென்றார். அவரது மகன் வேலுச்சாமி , இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரும் இன்னொரு மொபட்டில் சென்றனர்.

அவர்கள் கோபி அருகே காசிபாளையத்தில் உள்ள ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் டீ சாப்பிட செல்வதற்காக காசிபாளையம் அருகே வந்த போது அந்த வழியாக சென்ற ஒரு கார் ராமசாமி சென்ற மொபட் மீது மோதியது.

இதில் பலத்த அடிபட்ட அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னால் இன்னொரு மொபட்டில் வந்த மகன் வேலுச்சாமி இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே ராமசாமியை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News