செய்திகள்
பெருந்துறை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து
பெருந்துறை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஓரு ஏக்கர் கரும்புகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
பெருந்துறை:
காஞ்சிக்கோவில் அருகே உள்ள பாலப்பாளையம் பட்டான் காட்டு தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் நல்லசாமி .இவரது மனைவி மணியாத்தாள் (வயது 55).
இவர்களுக்கு சொந்தமாக 3 ஏக்கர் கரும்புகாடு உள்ளது. இதில் 5 அடி உயரத்தில் கரும்பு செடிகள் வளர்ந்து இருந்தன.
நேற்று அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக கரும்பு காட்டுக்கு மேல் உள்ள மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டன. இதனால் ஏற்பட்ட தீப்பொறி கரும்பு காட்டில் விழுந்தது. இதன் காரணமாக கரும்புகாட்டில் தீ விபத்து ஏற்பட்டு மள மள என்று பிடித்து எரிந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு படை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இதில் ஓரு ஏக்கர் கரும்புகள் தீயில் எரிந்து சாம்பலாயின.