செய்திகள்
பதவி பறிப்பு எதிரொலி: அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
பதவி பறிக்கப்பட்டதால் அ.தி.மு.க. பிரமுகரின் தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு காரை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக 2 ஆண்டு இருந்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இதில் முரளிதரன் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையொட்டி நீக்கப்பட்ட முரளிதரன் இன்று ஈரோடு எம்.ஜி.ஆர்.சிலை அருகே தீக்குளிக்கப் போவதாக அறிவித்திருந்தார். இவரது இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் முன் எச்சரிக்கையாக எம்.ஜி.ஆர். சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முரளிதரன் இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலிருந்து மண்எண்ணெய் கேனுடன் தீக்குளிக்க எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்து கொண்டிருந்தார்.
அவரை அ.தி.மு.க. பிரமுகர்கள் சமரசம் செய்தனர். அவசரப்பட வேண்டாம் என்று கூறினர். ஆனால் அதையெல்லாம் கேட்டகாமல் அவர் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்த முரளிதரனை போலீசார் தடுத்து, அவரிடமிருந்து மண்ணெண்ணை கேனை பறித்தனர். பிறகு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
சிறிது நேரம் அங்கு வைத்திருந்த அவரிடம் போலீசார் அறிவுரை கூறி பிறகு விடுவித்தனர். அ.தி.மு.க. பிரமுகரின் தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு காரை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக 2 ஆண்டு இருந்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இதில் முரளிதரன் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையொட்டி நீக்கப்பட்ட முரளிதரன் இன்று ஈரோடு எம்.ஜி.ஆர்.சிலை அருகே தீக்குளிக்கப் போவதாக அறிவித்திருந்தார். இவரது இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் முன் எச்சரிக்கையாக எம்.ஜி.ஆர். சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முரளிதரன் இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலிருந்து மண்எண்ணெய் கேனுடன் தீக்குளிக்க எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்து கொண்டிருந்தார்.
அவரை அ.தி.மு.க. பிரமுகர்கள் சமரசம் செய்தனர். அவசரப்பட வேண்டாம் என்று கூறினர். ஆனால் அதையெல்லாம் கேட்டகாமல் அவர் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்த முரளிதரனை போலீசார் தடுத்து, அவரிடமிருந்து மண்ணெண்ணை கேனை பறித்தனர். பிறகு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
சிறிது நேரம் அங்கு வைத்திருந்த அவரிடம் போலீசார் அறிவுரை கூறி பிறகு விடுவித்தனர். அ.தி.மு.க. பிரமுகரின் தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.