செய்திகள்

தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2016-09-20 13:35 IST   |   Update On 2016-09-20 13:35:00 IST
பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக குண்டர் சட்டத்தின் கீழ் அறிவழகனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை மிளகுமாரி செட்டித்தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். இவருடைய மகன் அறிவழகன் (வயது 27). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் பரிந்துரையின்பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் சமர்ப்பித்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் அண்ணாதுரை பரிசீலனை செய்து குண்டர் சட்டத்தின் கீழ் அறிவழகனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அறிவழகனை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News