செய்திகள்
வேதாரண்யம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
வேதாரண்யம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் வேதாரண்யம் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாகக்குடையான் பகுதியில் இருந்து மணல் ஏற்றிவந்த டிராக்டரை செம்போடை கடைவீதியில் போலீசார் மறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி மணல் எடுத்துவரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலிசார் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோ நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) ஜெயராஜிற்கு இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.