செய்திகள்
பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி
பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானி:
பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை படகுத்துறை பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி மீனா (வயது 21). மீனா தனது சகோதரர் செல்வம் என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
பவானி மேட்டூர் ரோடு ஊராட்சிக்கோட்டை அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மீனா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் மீது கார் ஏறியது. இதில் மீனா, செல்வம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மீனா மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.