செய்திகள்

கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி

Published On 2016-09-12 15:40 IST   |   Update On 2016-09-12 15:40:00 IST
கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் டயர் வெடித்ததில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள பாசூர் பழனி கவுண்டன் பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 29) தொழிலாளி.

இவர் தனது அத்தை ராமாயி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

பழனி கவுண்டம் பாளையம் அருகே வரும்போது மோட்டார் சைக்கிளின் முன்புற டயர் திடீர் என்று வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிளில் இருந்து முத்துக்குமாரும், ராமாயியும் கீழே விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த அடிபட்ட முத்து குமார் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராமாயி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மலையம், பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News