ஈரோடு அருகே படுத்து தூங்கிய மூதாட்டி தீயில் கருகி பலி
ஈரோடு:
ஈரோடு அருகே 46 புதூர் சின்ன பச்சப்பாளியில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம்.இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 70). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கினார். கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் தனது அருகில் கொசுவர்த்தி பற்ற வைத்திருந்தார்.
இந்த கொசுவர்த்தியில் இருந்து பரவிய தீ அதிகாலையில் பொன்னம்மாளின் சேலையில் பிடித்து எரிந்தது. இதில் அவரது நெஞ்சு, வயிறு, மற்றும் கால் தொடைகளில் தீக்காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் கந்தன் மற்றும் பொன்னம்மாளின் தம்பி குப்புசாமி ஆகியோர் பொன்னம்மாள் மீது பிடித்து எரிந்த தீயை அணைத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிசிக்சை பலன் இல்லாமல் பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.