செய்திகள்

அவல்பூந்துறை அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்

Published On 2016-09-08 18:18 IST   |   Update On 2016-09-08 18:18:00 IST
அவல்பூந்துறை அருகே கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரச்சலூர்:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த பச்சமுத்து (வயது 40), ஈரோடு மூலப்பட்டறை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் இருவரும் அரச்சலூர் அருகே உள்ள அவல்பூந்துறை 4 ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராவிதமாக அந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து பச்சமுத்து அரச்சலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News