திருமானூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருமானூர்:
காவிரியில் தண்ணீர்திறந்து விடக்கோரி அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே திருமானூர் ஒன்றிய அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருமானூர் விவசாய சங்க தலைவர் மணியன், வைத்தியலிங்கம், வரப்பிரசாதம், தங்க மலை,சி.பி.ஐ. கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பரிசுத்தம், கலியபெருமாள், சி.பி.எம். கட்சி ஒன்றிய செயலாளர் புனிதன், மாவட்டக் குழு உறுப்பினர் சவரிராஜன், ஆதித்தநாதன், சுப்பிரமணியன், ஏசுதாஸ்,
தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், துணை செயலாளர் தனபால், ஒன்றிய செயலாளர் கென்னடி, முருகேசன், ஜோதி வேல், இந்திய தேசிய காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் சீமான், மேற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் தேவர், கீழப்பழுர் செல்வகுமார்,
தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். எம்.குமார், மாவட்ட பொது செயலாளர் பழனிச்சாமி, விவசாய சங்க தலைவர் கைலாசம், உத்திராபதி, மேற்கு மாவட்ட தலைவர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.