செய்திகள்

திருமயம் அருகே கார் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி

Published On 2016-08-12 11:56 IST   |   Update On 2016-08-12 11:56:00 IST
கார் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம்  அருகே. நமண சமுத்திரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். ஆட்டோ டிரைவர் இவர் செபஸ்தியாபுரத்தில் உள்ள வாடிக்கையாளரை ஏற்றி வர சென்று கொண்டிருந்தார். நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே சென்றபோது காரைக்குடியிலிருந்து -பெங்களூர் நோக்கி சென்ற கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் சிதம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து நமண சமுத்திரம் காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த சிதம்பரம் உடலை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. இந்த விபத்து குறித்து நமண சமுத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News