செய்திகள்

கீரனூர் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2016-08-11 11:50 IST   |   Update On 2016-08-11 11:50:00 IST
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரனூர்:

கீரனூர் அருகே உள்ள கல்லூக்குமியல்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). கூலி தொழிலாளி இவர் தினமும் அருகில் உள்ள பாறை குளத்திற்கு சென்று குளிப்பது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கம் போல பாறை குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் குடத்தில் தண்ணீர் எடுத்து கரையில் நின்று குளித்துள்ளார். அப்போது தண்ணீர் எடுக்கும் போது குடம் கை தவறி குளத்தில் விழுந்து விட்டது.

குடத்தை எடுக்க முற்பட்ட போது ஆறுமுகம் கால் நழுவி குளத்தில் விழுந்துள்ளார். தண்ணீர் ஆழமான பகுதியில் சிக்கி கொண்ட ஆறுமுகம் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News