செய்திகள்

அடிப்படை வசதிகள் கேட்டு புதுக்கோட்டை மாணவர்கள் போராட்டம்

Published On 2016-08-09 17:26 IST   |   Update On 2016-08-09 17:26:00 IST
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே அரசு மன்னர் கல்லூரி அமைந்துள் ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங் கப்படாமல் உள்ளதாகவும், பேராசிரியர்கள் பற்றாக் குறையால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, இல்லாமல் இருப் பதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் மாணவர்களுக்கு இலவச அரசின் லேப்-டாப் வழங்க வேண்டும், கேண்டீனில் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கல்லூரியில் அய்வக வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கல்லூரிக்கு முன்பாக அமர்ந்து தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News