செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் கீரனூர் பேரூராட்சியை கைப்பற்ற தி.மு.க. வியூகம்: செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற தி.மு.க. சார்பில் தீவிர முயற்சி நடந்து வருகிறது.
கீரனூர்:
உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது கீரனூர் தேர்வு நிலை பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 10 கவுன்சிலர்களும், துணைத் தலைவரும் உள்ளனர். வரும் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற தி.மு.க. சார்பில் தீவிர முயற்சி நடந்து வருகிறது.
15 வார்டு வாரியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப் பட்டு வருகிறது. அதில் தி.மு.க. வடக்கு மாவட்ட துணை செயலாளர் செல்லபாண்டியன், நகர செயலாளர் பழனியப்பன், மாவட்ட பிரதிநிதி அசரப்அலி, ரவிச்சந்திரன், பழனி, அவைத்தலைவர் மாரிமுத்து, மதியழகன், அருள்ராஜ், இம்தியாஸ், சக்திவேல், ஆறுமுகம், சௌந்தர்ராஜன், நல்லையா ஆகியோர் கலந்து கொண்டு வார்டு உறுப்பினர்கள், பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வார்டில் உள்ள பிரச்சனைகள் என்ன? மக்களுக்கு செய்யாத பணிகள் என்ன உள்ளது? இது குறித்து சம்பந்தப்பட்ட தாலுகா, மாவட்ட அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, தீராத பிரச்சினைகளுக்கு மறியல் போராட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது கீரனூர் தேர்வு நிலை பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 10 கவுன்சிலர்களும், துணைத் தலைவரும் உள்ளனர். வரும் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற தி.மு.க. சார்பில் தீவிர முயற்சி நடந்து வருகிறது.
15 வார்டு வாரியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப் பட்டு வருகிறது. அதில் தி.மு.க. வடக்கு மாவட்ட துணை செயலாளர் செல்லபாண்டியன், நகர செயலாளர் பழனியப்பன், மாவட்ட பிரதிநிதி அசரப்அலி, ரவிச்சந்திரன், பழனி, அவைத்தலைவர் மாரிமுத்து, மதியழகன், அருள்ராஜ், இம்தியாஸ், சக்திவேல், ஆறுமுகம், சௌந்தர்ராஜன், நல்லையா ஆகியோர் கலந்து கொண்டு வார்டு உறுப்பினர்கள், பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வார்டில் உள்ள பிரச்சனைகள் என்ன? மக்களுக்கு செய்யாத பணிகள் என்ன உள்ளது? இது குறித்து சம்பந்தப்பட்ட தாலுகா, மாவட்ட அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, தீராத பிரச்சினைகளுக்கு மறியல் போராட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.