மயிலாடுதுறையில் டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நாகை மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.முருகேசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமானுஐம் தலைமை தாங்கினார். இதில் கண்டன உரை நிகழ்த்திய ராமனுஐம் தற்காலிகமாக மதுக்கடைகள் மூடப்படுவதால் பணியிழக்கும் பணியாளர்களை கடைகளிலேயே பணியமர்த்த வேண்டும். மூடப்பட்ட கடைகளில் உள்ள மதுபானத்தை கிடங்கில் ஒப்படைக்க ஏற்ப்பட்ட போக்குவரத்து செலவு தொகையை சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
மூடப்பட்ட கடைகளில் பணியிழந்த தொழிலாளர்களுக்கு தினம் அலுவலகம் சென்றுவர பயணப்படி அரசு வழங்க வேண்டும். இரவு நேரங்களில் கடைகளில் காவல் இருப்பதற்காக டாஸ்மாக் ஊழியர்களை நிர்ப்பந்திப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், இளங்கோவன், முருகன், ரமேக்ஷ்குமார், அருண் மாவட்ட இணைச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.