செய்திகள்
கொள்ளிடம் அருகே கார் மோதி கோவில் குருக்கள் பலி
கொள்ளிடம் அருகே கார் மோதியதில் கோவில் குருக்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58) கோவில் குருக்கள்.
இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கொள்ளிடம் கடை வீதிக்கு சென்றார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடன் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆத்தூரை சேர்ந்த கார் டிரைவர் ஷேக் அலாவுதீன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.