செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ்மோதி முதியவர் பலி

Published On 2016-04-23 18:41 IST   |   Update On 2016-04-23 18:40:00 IST
ஜெயங்கொண்டம் அருகே தனியார் பேருந்து மோதியதில் முதியவர் பலியானார்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வங்குடி வடக்குதெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). இவரும் இவரது மகன் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஜெயங்கொண்டம் பாப்பாக்குடி மெயின் ரோட்டில் நடந்து செல்லும்போது தனியார் பேருந்து மோதியது. இதில் பெருமாள் பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தார்.

இதுகுறித்து பெருமாள் மகன் ராஜேந்திரன் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் ஆண்டிமடம் நடுத்தெருவை சேர்ந்த வேல்முருகன் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News