செய்திகள்

அரியலூரில் 2816 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி நியமனம்: கலெக்டர் தகவல்

Published On 2016-04-22 17:18 IST   |   Update On 2016-04-22 17:18:00 IST
அரியலூர் மாவட்டத்தில் 2816 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் சரவண வேல்ராஜ் கூறியுள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக் கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016–ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவண வேல்ராஜ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார். இதில் அவர் கூறியாதாவது–

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் –1210 வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் 857 கட்டுப்பாட்டுக் கருவிகள், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையில் 24 மணி நேரமும் ஆயுத தாங்கிய காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

2816 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் மையங்களில் 24 ஏப்ரல், 7 மே, 12 மே மற்றும் 15 மே ஆகிய நாட்களில் தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

பிரதீப் குமார் தேர்தல் பார்வையாளராகவும் லுன்சி கிப்ஜென் காவல் பார்வையாளராகவும் மற்றும் நரேந்திர குமார் நாயக் செலவின பார்வையாளராகவும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செலவின பார்வையாளர், இன்று அரியலூர் வர உள்ளார்கள். பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களால் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.56.30 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மேல்முறையீட்டு குழுவால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மேல் முறையீடுதாரர்களுக்கு ரூ.22.48 இலட்சம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பா.ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News