செய்திகள்
ஜெயங்கொண்டம் பெண்ணிடம் நகை பறிப்பு
ஜெயங்கொண்டம் பெண்ணிடம் நகை பறிப்பு போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் கவரத்தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி கோமதி (வயது 35). ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளியில் ஆயாவாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வருவதற்காக அவ்வழியே வந்த அரசு பேருந்தில் ஏறி ஜெயங்கொண்டம் கருப்பையா பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கிய சிறுது நேரத்தில் கழுத்தில் போட்டிருந்த ஒன்றரை பவுன் தங்கச் செயினை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோமதி ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.