செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் கண்காணிப்பு குழு சோதனையில் ரூ.52 ஆயிரம் பறிமுதல்

Published On 2016-04-11 17:55 IST   |   Update On 2016-04-11 17:55:00 IST
ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் கண்காணிப்பு குழு சோதனையில் ரூ.52 ஆயிரம் பறிமுதல்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே மினிலாரியில் எடுத்துசெல்லபட்ட பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தலையொட்டி ஜெயங்கொண்டம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம்– திருச்சி சாலை தில்லைநகர் அருகில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரியும், துணைத்தாசில்தாருமான அருட்செல்வி தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்ளிட்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.சோதனையில் லாரியில்ரூ.52 ஆயிரம் பணம் இருந்தது . அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரியில் வந்த ஏழேரி கிராமத்தை சேர்ந்த சவுந்திரராஜன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News