செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவி கடத்தல்?
ஜெயங்கொண்டம் அருகே மாயமான பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாளையகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் கவிநிலவு ( வயது 20). இவர் இரும்புலிகுறிச்சியில் உள்ள அவரது தாத்தா சோமசுந்தரம் வீட்டில் வசித்து வந்தார்.
தற்போது 12–ம் வகுப்பு தேர்வு எழுதிய அவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டரில் சிறப்பு வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சென்ற கவிநிலவு அதன்பிறகுவீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சோமசுந்தரம் உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் வழக்கு பதிவு செய்து கவிநிலவு எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.