செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே விபத்துகளில் 6 பேர் காயம்

Published On 2016-04-05 21:18 IST   |   Update On 2016-04-05 21:18:00 IST
ஜெயங்கொண்டம் அருகே ஏற்பட்ட வெவ்வேறு விபத்துகளில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக்.

இவர் நேற்று முன்தினம் தனது தாய் ஜெயலட்சுமியை ஒரு டூவீலரில் அழைத்துக்கொண்டு அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் இருந்து தா.பழூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே அண்ணகாரன்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (22), என்பவர் தனது டூவீலரில் அவரது தந்தை பன்னீர் செல்வத்தை (60) அழைத்துகொன்டு, தா.பழூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பிள்ளையார்குளம் விநாயகர் கோயில் அருகே அவர் சென்றபோது எதிரே வந்த கார்த்திக் ஓட்டிவந்த பைக் சுபாஷ் பைக் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த தா.பழூர் போலீசார் காயமடைந்த நான்கு பேரையும் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். சுபாஷ், ஜெயலட்சுமி, கார்திக் ஆகியோர். மேல்சிகிச்சைக்காக தஞ்சை ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். இதுதொடர்பாக சுபாஷ் புகார் அளித்ததின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் தங்கதுரை (வயது27). இவர் நேற்று முன்தினம் வெண்மான்கொண்டான் கிராமத்தில் நடக்கும் கபடிபோட்டியை பார்க்க, தனது பைக்கில் சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி மகன் அஜித்குமார் (18), மற்றும் சிங்காரம் மகன் கார்த்திக் (22), ஆகியோரை பின்னால் உட்காரவைத்துக் கொண்டு சென்றார்.

மூர்த்தியான் கிராமம் அருகில் செல்லும்போது எதிரில்வந்த கார் இவர்கள் வந்த மோட்டர் சைக்கிளின் மீது மோதியது. இதில் பைக்கில்வந்த 3 பேரும் காயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் எஸ்.ஐ. ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேடிவருகின்றனர்.

Similar News