செய்திகள்

அரியலூரில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்

Published On 2016-04-04 18:26 IST   |   Update On 2016-04-04 18:27:00 IST
அரியலூர் ஒன்றிய, நகர தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் புரட்சிசிவா வரவேற்று பேசினார்.

அரியலூர்:

அரியலூர் ஒன்றிய, நகர தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் புரட்சிசிவா வரவேற்று பேசினார். ஒன்றிய அவைதலைவர் செந்தில், ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி, நகர அவைத்தலைவர் ராஜா, நகர பொருளாளர் சேகர், நகரதுணை செயலாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் இளையராஜா, ஜகநாதன், பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது–

தே.மு.தி.க.- மக்கள்நலக் கூட்டணி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தமிழக முதலமைச்சராக ஆக்குவோம்.

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட மாணவரணி தர்மராஜ், மாவட்ட மகளிரணி ராணி ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட வக்கீல் அணி கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி நல்லதம்பி, மாவட்ட தொழிற் சங்கம் பழக்கடை பாண்டியன், ஆனந்த், தொண்டரணி மதி மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பாலு, பாஸ்கரன், சதீஸ்குமார், பாலமுருகன், சக்திவேல், செல்வம், சாமிநாதன், கஜேந்திரன், சசிகுமார், ராதாகிருஷ்ணன், சக்திவேல், ராஜேந்திரன், நிவாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

கூட்டமுடிவில் 8வது வார்டு செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Similar News