உள்ளூர் செய்திகள்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்த காட்சி.

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

Published On 2022-07-27 09:09 GMT   |   Update On 2022-07-27 09:09 GMT
  • அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும்.
  • தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது.

சங்கரன்கோவில்:

தமிழகத்தின் புகழ்பெற்ற சிவ தலங்களில் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாக விளங்குகிறது.

கொடியேற்றம்

அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடித்தபசு திருவிழா கட்டு ப்பாடுகளுடன் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாவிற்கான பாது காப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவில் வளாகம், உட்பிராகாரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

2 ஆயிரம் போலீசார்

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே 2,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News