உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் கனமழையால் 200 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி சேதம்

Published On 2023-05-12 14:44 IST   |   Update On 2023-05-12 14:44:00 IST
  • வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும் அறுவடை செய்ய முடியாமலும் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.
  • சேதம் அடைந்த நெற்பயிர்களை விரைந்து ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

மத்தூர்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலான காவேரிப்பட்டினம், போச்சம்பள்ளி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக நீர் நிலைகள் மற்றும் குளங்கள் ஏரி என அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் தண்ணீர் நிரம்பி உபரி நீரானது வெளியேறி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகளவு வெளியேறிவரும் நிலையில் விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதால் இப்பகுதி விவசாய மக்கள் தங்களது விவசாயி பணிகளை தொடங்கி விவசாய பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெல், ராகி, மக்காச்சோளம் உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிர் செய்யப்பட்ட நிலையில் போச்சம்பள்ளி, சந்தூர், மகாதேவகொல்ல அள்ளி, தட்டக்கல், அனகோடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெய்த கனமழைக்கு சாய்ந்து வயல்களிலே படுத்து கிடக்கிறது.

இதில் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும் அறுவடை செய்ய முடியாமலும் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.

மேலும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததால் நெல் பயிரிளேயே முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நெல் பயிர் செய்த விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் சேதம் அடைந்த நெற்பயிர்களை விரைந்து ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நெல் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News