உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-10-12 08:59 GMT   |   Update On 2022-10-12 08:59 GMT
  • தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீவித்யன்
  • நேற்று இரவு இவர் வேலை முடிந்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ஸ்ரீவித்யன் (வயது26). வெல்டர்.

நேற்று இரவு இவர் வேலை முடிந்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சாப்பிட்ட பின்னர் தூங்க சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு பழனிச்சாமி கழிவறைக்கு சென்று திறந்து பார்க்கும் போது அங்கு ஸ்ரீவித்யன் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் நிலையில் இருந்துள்ளார்.

மற்றொரு சம்பவம்

அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (34) வெல்டர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. நேற்று முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப்போட்ட நிலையில் காணப்பட்டார்.

அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் முருகேசன் உயிரிழந்தார்.

இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News