உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பழனி அருகே யானை தாக்கி 2 பெண்கள் படுகாயம்

Published On 2022-08-22 08:25 GMT   |   Update On 2022-08-22 08:25 GMT
  • பழனி அருகே யானை தாக்கி 2 பெண்கள் படுகாயமடைந்தனர்
  • இருவரும் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள ஆயக்குடி பொன்னிமலை சித்தன்கோவில் கரடு பகுதியில் இன்று அதே பகுதியை சேர்ந்த வள்ளிநாயகம், முனியம்மாள் ஆகியோர் தோட்ட வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த யானைகள் திடீரென அவர்களை விரட்டி தாக்கியது. இதில் 2 பெண்களும் கூச்சலிட்டனர்.

உடனே அருகில் இருந்த மக்கள் ஓடிவந்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர். படுகாயமடைந்த இருவரும் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News