செம்மண் கடத்திய 2 டிராக்டர் பறிமுதல்
- செம்மண் கடத்துவதாக மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- டிரைவர்கள் டிராக்டர்களை விட்டு ஓடி விட்டனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த நாட்டான் கொட்டாய் அருகே உள்ள மணி நகரில் செம்மண் கடத்துவதாக மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உடனடியாக டேம் ரோடு அருகே உள்ள மணி நகரில் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபால் மற்றும் காவேரிப்பட்டணம் வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் தண்டே குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன் ரோந்து சென்றனர்.
அப்பொழுது அங்கு உரிய அனுமதியின்றி இரண்டு டிராக்டரில் தலா ஒரு யூனிட் செம்மண் கடத்துவதை பார்த்தனர். உடனடியாக டிராக்டரை தடுத்து நிறுத்திய போது இரண்டு டிராக்டர் டிரைவர்கள் டிராக்டர்களை அப்படியே விட்டு ஓடி விட்டனர். இதனையடுத்து 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காவேரிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.