உள்ளூர் செய்திகள்

தென்காசியில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

Published On 2023-11-18 08:42 GMT   |   Update On 2023-11-18 08:42 GMT
  • துறவி கொலையில் முகமது அலி, சுடலைக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
  • கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரன்படி கொலையாளிகள் 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தென்காசி:

தென்காசியில் தென்பழனி ஆண்டவர் கோவில் பின்புறம் உள்ள படித்துறையில் துறவி ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில் முகமது அலி மற்றும் சுடலைக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரன்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கொலையாளிகள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News