உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
- துரைசாமியாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- முத்துக்குமார்,இருளப்பா ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை:
இலத்தூர் அருகே துரைசாமியாபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், தலைமைக்காவலர்கள் கோபி, மாரியப்பன், முதல் நிலைக் காவலர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஊர் மேலழகியான் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் விருதுநகர் இருளப்பா ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.