உள்ளூர் செய்திகள்
மூலைக்கரைப்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
- குசலகுமாரி சம்பவத்தன்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.
- ஆத்திரம் அடைந்த அமிர்தலெட்சுமி உள்பட 4 பேரும் சேர்ந்து குசலகுமாரியை தாக்கினர்.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்தி பாட்டை சேர்ந்தவர் விஜய குமார் மனைவி குசலகுமாரி (வயது44). இவர் சம்பவத்தன்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பால கிருஷ்ணன் மனைவி அமிர்தலெட்சுமி (48), முத்து வேல் (27), முத்துவேல் மனைவி சரண்யா (27), பால கிருஷ்ணன் மகள் சவுமியா (23) ஆகியோர் களுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தலெட்சுமி உள்பட 4 பேரும் சேர்ந்து குசலகுமாரியை தாக்கினர். இதுபற்றி அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அமிர்த லெட்சுமி, முத்துவேல் ஆகியோரை கைது செய் தனர். மேலும் சரண்யா, சவுமியாவை தேடி வருகின்றனர்.