உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
- போலீசார் பணியில் ஈடுபட்டபோது, சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பாலு(வயது21), சுதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்
- அவர்களிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அருகே குளத்தூர் பகுதியில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கிராம சேவை மைய கட்டிடம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தும்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலு(வயது21), குலத்தார் கிராமத்தை சேர்ந்த சுதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.