உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறி முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலேரியில் சக்கரபாணி (வயது 35) என்பவர் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அரசராம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த நாகமணி (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்து மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறி முதல் செய்யப்பட்டது.