உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2022-10-07 07:33 GMT   |   Update On 2022-10-07 07:33 GMT
  • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 10 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு சோதனை சாவடி அருகே தீவிர ரோந்துபணி மேற் கொண்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த முனியன்(38), ஆரூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வ நாதன்(42) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News