உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

Published On 2022-08-17 08:04 GMT   |   Update On 2022-08-17 08:04 GMT
  • சிதம்பரம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
  • ஏழுமலை வயது 35 என்பவர் கையில் பெட்ரோல் கேனுடன் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக திட்டி கொண்டிருந்தார்

கடலூர்:

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது மண் ரோடு பகுதி அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை வயது 35 என்பவர் கையில் பெட்ரோல் கேனுடன் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக திட்டி கொண்டிருந்தார். இதேபோல் சிதம்பரம் அருகே சிவபுரி பஸ் நிறுத்தம் அருகில் நடுரோட்டில் வடகிரப்பு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் இடைவிடாத ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனைப் பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News