உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2023-02-25 09:44 GMT   |   Update On 2023-02-25 09:44 GMT
  • படுகாயம் அடைந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
  • அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ேகாவை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கோழிகுட்டையை சேர்ந்தவர் லட்சுமணசாமி. இவரது மனைவி ராணி (வயது 23). இவர்களது மகள் பிரியதர்ஷினி (3).

சம்பவத்தன்று இவர்கள் குடும்பத்துடன் கோமங்கலம் புதூருக்கு சென்றனர். பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பொள்ளாச்சி- உடுமலை ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் 3 பேர் மீதும் அடுத்தடுத்து மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராணி பரிதாபமாக இறந்தார்.

அவரது கணவர் லட்சுமணசாமி, மகள் பிரியதர்ஷினி ஆகியோர் பலத்த காயத்துடன் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூரை சேர்ந்தவர் கணபதி (வயது 78).சம்பவத்தன்று இவர் எல்.அண்டு.டி. பைபாஸ் ரோட்டில் பட்டணம்புதூர் பிரிவு அருகே நடந்து சென்றார்.திடீரென ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் கணபதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த கணபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News