உள்ளூர் செய்திகள்

கோவையில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Published On 2023-03-03 09:31 GMT   |   Update On 2023-03-03 09:31 GMT
  • மணிகண்டன் மொபட்டில் ெசன்றார்.
  • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் இறந்தார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). கூலித் ெதாழிலாளி.சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் தம்பம்பதி - கோ ழிப்பண்ணை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மணிகண்டனை அந்த வழியாக சென்றவர் மீட்டு வேட்டைக்காரன் புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமுகை அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (35). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.அந்த அந்த வழியாக சென்ற லோடு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News