உள்ளூர் செய்திகள்

கோவையில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2023-03-08 09:47 GMT   |   Update On 2023-03-08 09:47 GMT
  • துரைசாமி தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள கிருஷ்ணா கவுண்டர் நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் ஹேமலதா (14). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று துரைசாமி தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் ஹேமலதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து துரைசாமி மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்கள்.

வேலாண்டிபாளையம் அருகே உள்ள பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் இவரது மனைவி அமுத பூரணி (36). இவர் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது கணவரிடம் தாய் உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதாகவும், அவரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை .

அமுத பூரணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து கார்த்திகேயன் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News