உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2023-04-30 15:38 IST   |   Update On 2023-04-30 15:38:00 IST
  • வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பள்ளிக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீடடை விட்டு வெளியே சென்ற சிறுமி பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஓசூர் அரசனட்டி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிைலயத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News