உள்ளூர் செய்திகள்

கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-05-13 15:08 IST   |   Update On 2023-05-13 15:08:00 IST
  • குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காணப்பட்ட பிரபாகரன் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
  • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பாரதிநகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் பிரபாகரன் (26). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காணப்பட்ட பிரபாகரன் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எஸ்.குரும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (75). கூலித்தொ ழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு ஒரு விபத்தில் அடிப்பட்டு சரியான சிகிச்சை பெறமுடியாமல் நோய்வாய்ப்பட்டு கிடந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News