உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2023-07-02 07:25 GMT   |   Update On 2023-07-02 07:25 GMT
  • திருவெண்ணை நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.

விழுப்புரம்:

திருவெண்ணை நல்லூரை அடுத்த மண்டகமேடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49), இளந்துறையை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர்கள் 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News