லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது
- சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது ெதரியவந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த ராஜ்குமார் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பாரதி நகர் சேர்ந்த மோகன் தாஸ் (வயது31) என்பவரை லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.