உள்ளூர் செய்திகள்

குட்கா கடத்திய 2 பேர் கைது

Published On 2023-04-30 15:07 IST   |   Update On 2023-04-30 15:07:00 IST
  • பெங்களூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
  • விற்பனைக்காக, இவர்கள் குட்கா பொருட்களை கடத்திவந்ததும் தெரிந்தது.

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி செக்போஸ்ட் அருகே நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெங்களூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் காரில் சுமார் 207 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து காரில் இருந்த 2 பேரை போலீசார் விசாரித்ததில், மதுரை, ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26) மற்றும் சுடுதண்ணி வாய்க்கால் ரோட்டை சேர்ந்த மணிராஜ் என்பது தெரிய வந்தது.

மேலும் விற்பனைக்காக, இவர்கள் குட்கா பொருட்களை கடத்திவந்ததும் தெரிந்தது. இதை தொடர்ந்து கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News